Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்திரயான்-3 குறித்து விமர்சனம்: நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு..!

prakashraj
, புதன், 23 ஆகஸ்ட் 2023 (10:16 IST)
சந்திராயன் திட்டம் குறித்து தனது சமூக வலைதளத்தில் கிண்டலாக விமர்சனம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் இன்று நிலவில் தரையிறங்க உள்ளது என்பதும் இது சரித்திர சாதனையாக கருதப்படுகிறது என்றும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திராயன் 3 திட்டத்தை விமர்சத்து ஒரு பதிவை செய்திருந்தார். அதில் ஒருவர் தேநீர் ஆற்றும் புகைப்படத்தை பதிவு செய்ததை அடுத்து அவர் பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்வதாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்து மலையாளிகள் எந்த பகுதியிலும் ஒரு டீக்கடை வைத்திருப்பார்கள், அதுபோல் நிலவிலும் டீக்கடை வைப்பார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்வதற்கு தான் பதிவிட்டேன் என்று கூறியிருந்தார். 
 
ஆனால் இந்த பதிவு  உள்நோக்கம் கொண்டது என்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் பிரகாஷ்ராஜ் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்க பதிவு செய்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த பங்குச்சந்தை.. வரும் நாட்களில் என்ன ஆகும்?