Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”2021 எலெக்‌ஷன்லயும் நாங்கதான்”: கெத்து காட்டும் ஜெயகுமார்

Arun Prasath
வியாழன், 24 அக்டோபர் 2019 (12:48 IST)
விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் எண்ணிக்கையில் இரு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்றுள்ள நிலையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் 2021 தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் தற்போதைய நிலவரப்படி 92,976 வாக்குகள் முன்னிலையில் உள்ளது. அதே போல் நாங்குநேரி தொகுதியிலும் அதிமுக 52,155 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.

இதன் மூலம் அதிமுக-ன் வெற்றி ஓரளவு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், இது தர்மத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், இந்த தேர்தலின் வெற்றியை பார்க்கும்போது 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும்” எனவும் பெருமிதமாக கூறியுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தமிழகத்தில் சொற்ப வாக்குகளே பெற்று பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தற்போது இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது பாஜகவிற்கு எதிரான தமிழக மக்களின் மனநிலை என்னவானது என எதிர்தரப்பினர் சந்தேகத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments