Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயக்குமாரின் மகள்-மருமகன் முன் ஜாமின் மனுதாக்கல்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (13:27 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்பதும் மூன்று வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் மூன்று வழக்குகளில் ஒன்றான நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமார் மட்டுமின்றி அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன்குமார் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின்  மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் குமார் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது சென்னை குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயப்பிரியாவை கைது செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments