Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரி 3ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

holiday
, சனி, 24 டிசம்பர் 2022 (12:31 IST)
ஜனவரி 3ஆம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்றும் அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஜனவரி 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவில் கந்தூரி விழா நடைபெற உள்ளது. இதனை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 
எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஜனவரி 3ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 21-ம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்கள் அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி சான்றிதழ் இல்லை என்றால் அனுமதி இல்லை: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு