Publish Date: Tue, 18 Jan 2022 (14:34 IST)
Updated Date: Tue, 18 Jan 2022 (15:11 IST)
முன்னதாக 1-9ஆம் வகுப்புகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் 10,11,12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 31 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 1-9ஆம் வகுப்புகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் 10,11,12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஒரேநாளில் 2,093 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,40,710 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,893 ஆக அதிகரித்துள்ளது.