Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவேக் மரணம் புது திருப்பம் - 8 வாரத்துக்குள் நடவடிக்கை!

விவேக் மரணம் புது திருப்பம் - 8 வாரத்துக்குள் நடவடிக்கை!
, சனி, 11 செப்டம்பர் 2021 (08:41 IST)
தமிழ் நகைச்சுவை நடிகரான விவேக் மரணம் குறித்து 8 வாரத்துக்குள் மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு. 
 
தமிழ் நகைச்சுவை நடிகரான விவேக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நல குறைவால் காலமானார். அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில் அவரது இறப்புக்கு தடுப்பூசி காரணமா என்ற கேள்வி எழுந்தது.
 
இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்தியதால் இறந்தாரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். அவரது இந்த வழக்கை மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. 
 
இதனைத்தொடர்ந்து மனுதாரரின் இந்த கோரிக்கை குறித்து 8 வாரத்துக்குள் மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட ஆணையம், இந்த வழக்கை முடித்து வைத்தது.
 
மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பாக அனைவருக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும். எதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது அப்போது தான் தெளிவாக தெரிய வரும். இதற்கு நடிகர் விவேக் மரணம் ஒரு முக்கிய உதாரணமாக உள்ளது என தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

22.46 கோடியைக் கடந்த பாதிப்பு - உலக கொரோனா நிலவரம்!