Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் 5,75,648 பேருக்கு தடுப்பூசி - தமிழகம் சாதனை!

ஒரே நாளில் 5,75,648 பேருக்கு தடுப்பூசி - தமிழகம் சாதனை!
, புதன், 1 செப்டம்பர் 2021 (10:42 IST)
இதுவரையில் அதிகபட்ச அளவில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,75,648 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
 
இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல் கல்லாக ஒரேநாளில் 1.08 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் 64,05,28,644 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 
இதே போல தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,75,648 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவே இதுவரையில் அதிகபட்ச அளவிலான தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொருளாதாரம் வீழ்ச்சி; உணவுக்கு தட்டுப்பாடு! – இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!