Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை: பெரும் பரபரப்பு

Mahendran
புதன், 8 ஜனவரி 2025 (14:06 IST)
சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரியைத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.  

பூந்தமல்லியை அடுத்த சாத்தங்காடு என்ற பகுதியில் உள்ள தனியார் மெட்டல் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல், சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலும் வருமானவரி சோதனை நடைபெறுகிறது.

மேலும், பூக்கடை திருவொற்றியூர், சாத்தங்காடு, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டுமான மற்றும் மெட்டல் நிறுவனங்களுக்கு சொந்தமான ஆறு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 ஏற்கனவே, எடப்பாடி பழனிச்சாமி உறவினர் ராமலிங்கம் என்பவரது நிறுவனத்தில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், இன்று சென்னையில் உள்ள ஆறு இடங்களில் சோதனை செய்வதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் ஸ்கெட்ச்சு பொன்முடிக்கு.. ஆளுநரை சந்திக்கும் நயினார் நாகேந்திரன்!

ஆங்கில புத்தகங்களிலும் ஹிந்தி.. கடிதத்தில் ஹிந்தி.. என்னது இது? - சு.வெங்கடேசன் ஆதங்கம்!

வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணை எப்போது? சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு..!

சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம்.. அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments