Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் உயிருள்ள வரையில் அரசியலில்.....கமல்ஹாசன் உருக்கம்

Webdunia
திங்கள், 24 மே 2021 (17:16 IST)
என் உயிருள்ள வரையில் அரசியலில் இருப்பேன் என நடிகர் கமல்ஹாசன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
 

தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்நிலையில் ஒரு தொகுதியிலும் மநீம வெற்றி பெறாத நிலையில், கமல்ஹாசன் தனது சினிமா படப்பிடிப்புகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் மற்ற நிர்வாகிகள் ஆலோசனைகளை கமல் ஏற்கவில்லை என்றும், அனைத்திலும் தன்னிச்சையாகவே முடிவெடுத்தார் எனவும் பலர் குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து தொடர்ந்து பலர் விலகி வரும் நிலையில் சமீபத்தில் சி.கே.குமரவேலு விலகினார். இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இன்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மாற்றம் என்பது மாறாமல் நிகழும். நேர்மையின் முறையில் மாற்றத்தைத்தேடுவோம். மூச்சுள்ளவரையில் அதன் பாதுகாவலர்களாய் இருப்போம். விதை விழுந்தால் மண்ணைப் பற்றிவிட்டால் விரைவில் காடாகும் நாளை நமதாகும். என்னுயிர் உள்ள வரையில் நான் அரசியலில் இருப்பேன். அரசியலில் இருக்கும் வரை மக்கள் நீதி மையம் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் மேலும், தோல்வியை ஆராய்ந்து வெற்றி பாடம் கற்றது நம் சரித்திரம் கண்ட உண்மை எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments