Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடி மாணவருக்கு அமெரிக்காவில் வேலை.. சம்பளம் ரூ.4.30 கோடி..!

Siva
வியாழன், 5 டிசம்பர் 2024 (17:15 IST)
சென்னை ஐஐடியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவருக்கு அமெரிக்காவில் ரூ.4.30 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்ததாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி வரலாற்றில் மிக அதிக சம்பளத்தில் வேலை கிடைத்த மாணவர் இது என்றும் கூறப்பட்டு வருகிறது.

சென்னை ஐஐடியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பிளேஸ்மெண்ட் தொடங்கியுள்ள நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் தேர்வு நடத்தின. இந்த தேர்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், சென்னை ஐஐடியில் நடந்த பிளேஸ்மெண்டில் மாணவர் ஒருவருக்கு ரூ.4.30 கோடி சம்பளத்துடன் வேலை கிடைத்தது. இதுவே சென்னை ஐஐடியில் படித்த மாணவருக்கு அதிக சம்பளத்துடன் வேலை கிடைத்த அனுபவம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிரபல வால் ஸ்ட்ரீட் டிரேடிங் நிறுவனத்தை அங்கமான ஜேன் ஸ்ட்ரீட் டிரேடிங்  நிறுவனத்தால் அவர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், முதல் கட்டமாக அவர் ஹாங்காங் பிரிவில் பணியமத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், மாணவரின் பெயரை சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிடவில்லை. மேலும், ஏராளமான மாணவர்கள் இந்த ஆண்டு பிளேஸ்மெண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ஐஐடி நிர்வாகிகள் தெரிவித்துள்ளன.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments