’என் மகனுக்கு சீட்’ என சீமான் கூறியது குறித்து இடும்பாவனம் கார்த்திக் விளக்கம்!

Siva
ஞாயிறு, 24 மார்ச் 2024 (14:08 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த போது அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் இளைஞரை களம் இறக்க போகிறேன் என்றும் நான் ஒருவன் தான் அந்த கூட்டத்தில் மூத்தவனாக இருப்பேன் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் மூத்த மகனுக்கு அடுத்த முறை தேர்தலில் நிற்க சீட் தரப் போகிறேன் என்றும் அவனும் சரி என்று சொல்லி விட்டான் என்று சீமான் கூறியதாக ஊடகங்களின் செய்தி வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள சீமான் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக் ’சீமான் மேடையில் என் மகன் என்று கூறியது அவருடைய மகனை அல்ல, ஹிமாயின் மகன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் ஊடகங்கள் மொட்டையாக எனது பெரிய மகன் என்று செய்தியாக திரித்து எழுதி உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் 2026 தேர்தலில் 117 பெண்கள் மற்றும் 117 ஆண்களை களத்தில் இறக்க போவதாகவும், அதில் என்னை தவிர எல்லோருமே இளைஞர்கள் என்று சீமான் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அடுத்த கட்டுரையில்
Show comments