Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்திரத்தால் கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (19:29 IST)
மந்திரத்தால் கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்த வைரஸிலிருந்து பொது மக்களை காக்க தடுப்பூசி கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்
 
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவை மாயத்தாலும், மந்திரத்தாலும் குணப்படுத்தி விடுவேன் என்று கூறி பல லட்சம் மோசடி செய்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் 
 
ஐதராபாத் அருகில் உள்ள  ஹனிப் என்ற காலனி பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் பாபா. இவர் கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி காய்ச்சல் இருமல் சளியுடன் வருபவர்களுக்கு மந்திரங்கள் சொல்லி, எலுமிச்சம் பழம் மற்றும் விபூதி வழங்கி வந்துள்ளார். இதற்காக அவர் ஒவ்வொருவரிடமும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாங்கி உள்ளதாக தெரிகிறது 
 
இது போல் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் ஏமாந்து உள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவரை கண்காணித்து வந்த போலீசார் இஸ்மாயில் பாபாவை கைது செய்தனர் மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments