Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”அனுமன் சலிசா சொன்னால் கொரோனா போய்டும்!” – அடுத்த சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்.பி!

”அனுமன் சலிசா சொன்னால் கொரோனா போய்டும்!” – அடுத்த சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்.பி!
, ஞாயிறு, 26 ஜூலை 2020 (15:38 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவை ஒழிக்க அனுமன் சலிசா மந்திரத்தை சொல்ல வேண்டும் என பாஜக எம்.பி பிரக்யா தாகூர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம் கொரோனா மற்றும் கொரோனா தடுப்பு குறித்த தவறான தகவல்களும் இணையத்தில், சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன. கொரோனா குறித்த ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என மத்திய அரசு தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடியும் மன் கீ பாத் நிகழ்ச்சியில் இந்த கோரிக்கையை வைத்தார்.

இந்நிலையில் பாஜக பிரபலங்களே தொடர்ந்து தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கொரோனாவை ஒழிக்க பசு கோமியம், பாபிஜீ அப்பளம் போன்ற சர்ச்சைகளை தொடர்ந்து மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் பாஜக எம்பி பிரக்யாசிங் தாகூர். சமீபத்தில் கொரோனாவை ஒழிப்பது குறித்து பேசிய இவர் “தினமும் ஐந்து முறை அனுமன் சலிசா மந்திரத்தை சொல்லி வந்தால் உலகத்திலிருந்தே கொரோனா போய்விடும்” என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24 மணி நேரத்தில் கனமழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம்!