Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்யாணம் ஆகி 7 ஆண்டுகள் கழித்து கணவன் வரதட்சனைக் கேட்டு தொல்லை… மனைவியின் முடிவால் இப்போது சிறையில்!

கல்யாணம் ஆகி 7 ஆண்டுகள் கழித்து கணவன் வரதட்சனைக் கேட்டு தொல்லை… மனைவியின் முடிவால் இப்போது சிறையில்!
, புதன், 23 செப்டம்பர் 2020 (15:54 IST)
செஞ்சி அருகே கணவன் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதால் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

செஞ்சி அருகே உள்ள திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்  அன்பழகன். இவருக்கு செல்வி என்ற பெண்ணோடு 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. ஆனால் இப்போது அன்பழகன், செல்வியிடம் தாய் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வர சொல்லி தொல்லைக் கொடுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த செல்வி தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை குற்றுயிரும் குலையுருமாக கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து செல்வியின் தாயார் அளித்த புகாரின் படி அன்பழகன் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவின் முதல் வேலையே இதுதான்.. போட்டுடைத்த வெற்றிவேல்!!