தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக செந்தில் பாலாஜி கூறினார்: மனித உரிமை ஆணைய உறுப்பினர்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (12:16 IST)
தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக செந்தில் பாலாஜி கூறினார்என மனித உரிமை ஆணைய உறுப்பினர் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார்.
 
இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தன்னை இழுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி சோர்வாக காணப்பட்டார். தன்னை தாக்கியதாக சில அதிகாரிகளின் பெயர்களையும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்
 
பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் நேரில் விசாரித்தேன் என்று கூறிய மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், தன்னை தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார் என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து பெறப்பட்ட  தகவலின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் நாளை முடிவெடுக்கும் என்றும், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதனை விசாரித்துள்ளது என்றும் கூறினார்.
 
தான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த பின்பும்  துன்புறுத்தியதாக செந்தில் பாலாஜி கூறினார் என்றும் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார். மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக திமுக சார்பில் தொலைக்காட்சிகளில் விவாதம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு!

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்
Show comments