பொளந்து கட்டிய கனமழை.. இன்று எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள் விடுமுறை?

Siva
திங்கள், 24 நவம்பர் 2025 (08:34 IST)
தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருவதை அடுத்து, சில மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
 
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், புவனகிரி, சிதம்பரம் ஆகிய பகுதிகளிலும் 10 முதல் 14 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், விருதுநகர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, திருச்சி, அரியலூர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வெயில் அடிப்பதால், சென்னை உள்பட வட மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments