Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேனர் வைக்கத் தடை – நீதிமன்றம் அதிரடி முடிவு !

பேனர் வைக்கத் தடை – நீதிமன்றம் அதிரடி முடிவு !
, வியாழன், 14 மார்ச் 2019 (14:16 IST)
தமிழகம் முழுவதும் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்கான பேனர்கள் வைக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சாதா நாட்களிலேயே தெருக்கள் முழுவதும் பேனர்கள் சுவர் முழுவதும் அரசியல் கட்சி போஸ்டர்களாகவும் காட்சியளிக்கும். இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் சொல்லவே வேண்டாம். தேர்தல் முடியும் வரை பொதுக்கூட்டம், பிரச்சாரம் என எல்லாவற்றிற்கும் பேனர்கள் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

இந்நிலையில் சமீபகாலமாக தமிழகத்தில் போஸ்டர் மற்றும் பேனர்களுக்கு எதிராக வலுவானக் குரல்கள் எழுந்துள்ளன. இதற்குக் காரணம் சாலையோரம் வைக்கப்படும் பேனர்கள் விழுந்து ஏற்படும் விபத்துகளும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுமேயாகும். இதைத் தொடர்ந்து இப்போது தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்கத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை விதித்தனர். மேலும்  அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு மக்களைக் கூட்டாக அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளையும் சேர்த்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொள்ளாச்சி விவகாரம்! அதிமுக - திமுக புள்ளிகளுக்கு தொடர்பு - தினகரன்