Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

Mahendran
செவ்வாய், 10 ஜூன் 2025 (17:12 IST)
சென்னையின் பல பகுதிகளில் தற்போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 
சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி தற்போது சென்னையின் பல இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
 
சென்னை, தேனாம்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், பாண்டி பஜார், மைலாப்பூர், அண்ணா சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மெதுவாகவும், கவனத்துடனும் வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழை முதல் கனமழை வரையும் பெய்யக்கூடும் என்றும், வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments