Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
, வெள்ளி, 15 ஜனவரி 2021 (12:54 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது என்பதும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை தூத்துக்குடி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது 
 
அதுமட்டுமின்றி தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொங்கு மண்டலத்திற்கு சிறப்பு ரயில்கள் வேண்டும்: கமல்ஹாசன் கோரிக்கை