Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காலை 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Siva
திங்கள், 2 டிசம்பர் 2024 (07:23 IST)
இன்று காலை 10 மணிக்குள், தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. 
 
வங்கக்கடலில் தோன்றிய புயல் கரையை கடந்தாலும், அதன் தாக்கம் இன்னும் நிலவி வருவதால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை கவனிக்க முடிகிறது.
 
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை, இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
எனவே, மேற்கண்ட பத்து மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே, தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட சில பகுதிகளில் அதிக கன மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதை பொருள் விவகாரத்தில் இன்னொரு தமிழ் ஹீரோவுக்கு தொடர்பா? சம்மன் அளிக்க திட்டம்..!

எடப்பாடியார் கோவப்பட்டால் வேற மாதிரி ஆயிடும்! - பாஜகவுக்கு ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி.. நீதிபதி அளித்த தண்டனை விவரம்..!

பாகிஸ்தானை அடுத்து வங்கதேசத்திற்கும் தண்ணீர் நிறுத்தமா? இந்தியா அதிரடி..!

இன்று ஒரே நாளில் 600 ரூபாய் குறைந்த தங்கம்.. இனி அதிகம் குறையும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments