Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையின் பல பகுதிகளில் மழை: போக்குவரத்து பாதிப்பு!

rain
, திங்கள், 31 அக்டோபர் 2022 (20:32 IST)
சென்னையின் பல பகுதிகளில் தற்போது மிதமான மழை முதல் கனமழை பெய்து வருவதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
வடகிழக்கு பருவமழை சமீபத்தில் தொடங்கியதை அடுத்து சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் நல்ல மழை பெய்த நிலையில் சற்றுமுன் சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 
 குறிப்பாக மெரினா கடற்கரை, அண்ணா சாலை, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, கோடம்பாக்கம், பிராட்வேஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது 
 
அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு சென்னையில் மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
சென்னையில் மழை பெய்துள்ளதால் பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் வருகிறார் மம்தா பானர்ஜி: முதல்வர் ஸ்டாலினுடன் முக்கிய பேச்சுவார்த்தை!