Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 21 மார்ச் 2025 (18:27 IST)
தமிழகத்தில் இன்றும் நாளையும் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், ஆனால் அதே சமயத்தில் மற்ற பகுதிகளில் வெயில் கொளுத்தும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு பகுதியில் மற்றும் கிழக்கு-மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, குமரி கடல் பகுதியில் இருந்து தென் தமிழகத்தை நோக்கி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் சில பகுதிகளில் கனமழை பெய்யுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
 
ஆனால் அதே நேரத்தில், மார்ச் 23 வரை தமிழகத்தின் பிற பகுதிகளில் அதிக வெப்பநிலை நிலவும். சென்னையில், அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில், அதிகபட்சமாக 33°C வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments