Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 21 மார்ச் 2025 (16:41 IST)
தெலங்கானா மாநிலத்தில் உள்ள சாரலப்பள்ளி என்ற நகரில் இருந்து கன்னியாகுமரிக்கு திருவண்ணாமலை வழியாக  3 மாதங்களுக்கு  சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
தெலங்கானா மாநிலத்தின் சாரலப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து கோடை கால சிறப்பு ரயில் (எண் - 07230) புதன்கிழமை இரவு 9.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் குண்டூர், ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, திருத்தணி, மற்றும் காட்பாடி வழியாக பயணித்து, மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 12.40 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.
 
அதன் பிறகு, மதியம் 12.42 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோயில் வழியாக சென்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு கன்னியாகுமரியை அடையும்.
 
அதேபோல், கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து கோடை கால சிறப்பு ரயில் (எண் - 07229) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும். முன்னதாக பயணித்த அதே வழித்தடம் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை அதே நாளில் மாலை 6.00 மணிக்கு சென்றடையும். பின்னர், மாலை 6.02 மணிக்கு புறப்பட்டு சாரலப்பள்ளி ரயில் நிலையத்தை சனிக்கிழமை காலை 11.40 மணிக்கு அடையும்.
 
இந்த சிறப்பு ரயில் சாரலப்பள்ளி - கன்னியாகுமரி வழித்தடத்தில் ஏப்ரல் 2, 9, 16, 23, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
 
அதேபோல், கன்னியாகுமரி - சாரலப்பள்ளி வழித்தடத்தில் ஏப்ரல் 4, 11, 18, 25, மே 9, 16, 23, 30, ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் ரயில் சேவை நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments