Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனமழை எதிரொலி: 5 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை எதிரொலி: 5 மாவட்டங்களில் விடுமுறை
, சனி, 24 நவம்பர் 2018 (08:18 IST)
கனமழை எதிரொலியாக 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பிலிருந்து மீண்டுவராத நிலையில் தமிகத்தில் அதிலும் குறிப்பாக டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியது. இதனிடயே டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. அதேபோல் திருச்சி, தஞ்சாவூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் தற்பொழுது வெளியில் அடித்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக-மதிமுக இடையே விரிசலை ஏற்படுத்தியதா கஜா?