Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக-மதிமுக இடையே விரிசலை ஏற்படுத்தியதா கஜா?

திமுக-மதிமுக இடையே விரிசலை ஏற்படுத்தியதா கஜா?
, வெள்ளி, 23 நவம்பர் 2018 (21:27 IST)
கஜா புயலினால் டெல்டா பகுதி மக்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களுக்கு விரிசலை ஏற்படுத்தியது போல திமுக மற்றும் மதிமுகவுக்கும் இடையிலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கஜா புயல் நிவாரண பணியை சரிவர தமிழக அரசு செயல்படவில்லை என்றும், மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறுவதில் சுணக்கம் காட்டி வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று முதல்வர் பார்வையிடவில்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார்.

ஆனால் திமுக தலைவர் மு,க.ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சூளுரைத்து வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 'கஜா புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், சீரமைப்பு பணிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் மின் ஊழியர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

webdunia
கஜா புயல் நிவாரண பணிகள் குறித்து மாறுபட்ட கருத்துக்களை வைகோவும், ஸ்டாலினும் தெரிவித்திருப்பது இரு கட்சிகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'பேட்ட' ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்