Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்

18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்
, புதன், 21 ஜூன் 2023 (08:00 IST)
கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 18 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என்று இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
 
மேலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது வானிலை மாறி குளிர்ந்த தகவல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெர்மன் நாட்டின் கவுரமிக்க அமைதி பரிசு சல்மான் ருஷ்டிக்கு அறிவிப்பு