Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை: பள்ளி, அலுவலகம் செல்வோர் ஜாக்கிரதை..!

அடுத்த 3 மணி நேரத்தில்  12 மாவட்டங்களில் மழை: பள்ளி, அலுவலகம் செல்வோர் ஜாக்கிரதை..!
, திங்கள், 6 நவம்பர் 2023 (07:14 IST)
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து பள்ளி கல்லூரி செல்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.  
 
வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து தமிழகம் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது. 
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,  வேலூர், திருவண்ணாமலை, சேலம், ராமநாதபுரம், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணிக்கு தானாக இருக்கும் மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈஷா சார்பில் பிரம்மாண்டமாக நடந்த பாரம்பரிய காய்கறி திருவிழா! - தமிழகம் முழுவதுமிருந்து 2000 விவசாயிகள் பங்கேற்பு!