Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Advertiesment
கனமழை

Mahendran

, வியாழன், 18 செப்டம்பர் 2025 (10:05 IST)
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று  கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
தென்னிந்திய கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் இன்று முதல் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சில பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
மேலும் செப்டம்பர் 18 முதல் 20 ஆம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், ஆட்சியில் பங்கு கேட்போம்: கே.எஸ்.அழகிரி அதிரடி பேச்சு..!