Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

6 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
, புதன், 26 மே 2021 (13:15 IST)
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வரும் நிலையில் தற்போது 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தேனி திண்டுக்கல் குமரி தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளது. சென்னை உள்பட வட மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழைக்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு ஒரு சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்… மத்திய அமைச்சர் தகவல்!