Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Advertiesment
கனமழை

Siva

, ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (14:58 IST)
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று  முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
 
வடமேற்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த 'சக்தி' தீவிரப் புயல், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று குஜராத்தின் துவாரகாவிலிருந்து சுமார் 820 கி.மீ. தொலைவில் உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். எனினும், தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை நீடிக்கும்.
 
அக்டோபர் 5ஆம் தேதி மழை பெய்யும் மாவட்டங்கள்: நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி (மலைப் பகுதிகள்) ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
 
அக்டோபர் 6  தேதி மழை பெய்யும் மாவட்டங்கள்: : திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவை 
 
அக்டோபர் 7: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர்
 
அக்டோபர் 8, 9  தேதி மழை பெய்யும் மாவட்டங்கள்: : கோவை (மலைப் பகுதிகள்), நீலகிரி .
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை குறையக்கூடும்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!