தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கான மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் “அடுத்த 2 நாட்களில் கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் சில பகுதிகளிலும் பரவ வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்
இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் குறையும் வாய்ப்புள்ளது.
Edit by Prasanth.K