தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும்ம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 13ம் தேதி முதல் தொடங்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை, இரவு நேரங்களில் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K