கனமழை எதிரொலி.. இன்று ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை..

Siva
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (08:27 IST)
கனமழை காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. இரவில் கனமழை பெய்யத் தொடங்கியதால், கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. 
 
இதனை அடுத்து, இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால், குமரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 180 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், இன்றும் அதே அளவு மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேலி கிண்டலால் பறிபோன உயிர்!... 9 வயது சிறுமி தற்கொலை!.

வாக்குத்திருட்டை தேர்தல் ஆணையத்தில் ராகுல் காந்தி ஏன் புகார் அளிக்கவில்லை: பாஜக

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

கேரள குருவாயூர் கோயிலில் 'ரீல்ஸ்': ஓவியக் கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்கு!

வீடு தேடி போய் கமலை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!.. வைரல் புகைப்படங்கள்...

அடுத்த கட்டுரையில்
Show comments