Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. அதிரடி உத்தரவு..!

Advertiesment
பகுஜன் சமாஜ் கட்சி

Mahendran

, புதன், 6 ஆகஸ்ட் 2025 (12:07 IST)
கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்டவர்களில் 17 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
 
இந்த நிலையில் தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, 17 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
 
அதேசமயம், வழக்கில் உள்ள தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், ஜாமீன் மனுக்களை மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
 
குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும், அவர்களுக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை. இந்த உத்தரவு, வழக்கின் போக்கை தீர்மானிக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தப்பிக்க முடியாது என தெரிந்தும் ஏன்?.. திருப்பூர் எஸ்.ஐ கொலை குறித்து 3 விஷயங்கள் கூறிய அண்ணாமலை..!