Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவித்தது மத்திய அரசு!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (19:49 IST)
தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை முழுவதையும் விடுவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்னர் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழக அரசும் தமிழக நிதி அமைச்சரும் கூறி இருந்தனர்.
 
இந்த நிலையில் தமிழகத்திற்கு ரூபாய் 9602 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. மே 31-ஆம் தேதி வரை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு விடுவித்த ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மொத்த மதிப்பு 86,902 கோடி என்றும் கூறப்படுகிறது.
 
 மத்திய அரசு தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவை தொகையை கொடுத்து விட்டதை அடுத்து நலத்திட்டங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments