Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா-41 படத்தின் தலைப்பு இதுதான்!

சூர்யா-41  படத்தின் தலைப்பு இதுதான்!
, செவ்வாய், 31 மே 2022 (18:01 IST)
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்  சூர்யா, இவர் பாலா இயக்கத்தில் நடித்து வரும் புதிய படம் குறித்த ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 
 
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்தது.
 
இதையடுத்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஜூன் 7 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மதுரை சம்மந்தமான காட்சிகளை சென்னையிலேயே எடுத்துவிட்டு, அடுத்து கோவாவுக்கு புறப்பட உள்ளார்கள் என தகவல் வெளியானது.
 
பிதாமகன், நந்தா ஆகிய படங்களை அடுத்து, சூர்யா- பால இருவரும் இணைந்துள்ள இப்ப்டம்   பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்படத்திற்கு கடலாடி என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
சூர்யா 41 படத்தில் தலைப்பு குறித்து  விரைவில்  அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியானது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15 நாட்களில் தொடர்ந்து 4 வது மாடலிங் பெண் தற்கொலை!