Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் கையில் இருந்த அந்த ஓவியம்..! – காரை நிறுத்த சொன்ன பிரதமர் மோடி!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (18:12 IST)
இமாச்சல பிரதேசம் சென்ற பிரதமர் மோடி பெண் ஒருவர் வைத்திருந்த ஓவியத்தை கண்டதும் காரை நிறுத்த சொன்ன சம்பவம் வைரலாகியுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் சரியாக 8 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதை சிறப்பிக்கும் விதமாக நேற்று முதல் ஜூன் 14ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் வகையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மக்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். அப்போது பெண் ஒருவர் பிரதமர் மோடியின் தாயாரை ஓவியமாக வரைந்து அவரிடம் கொடுப்பதற்காக காத்திருந்தார். அதை கண்டதும் தனது காரை நிறுத்திய பிரதமர் மோடி அந்த பெண்ணிடம் இருந்து ஓவியத்தை பெற்றுக் கொண்டு அவருக்கு நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை தரம் தாழ்ந்து விஜய்யை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது: தவெக கண்டனம்..!

மற்றுத்திறனாளிகளுக்ககு ஸ்கூட்டர்.. திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை.. சட்டசபையில் முக்கிய அறிவிப்பு..!

4வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் 80,000ஐ தாண்டுமா சென்செக்ஸ்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்தை நெருங்குகிறதா?

அக்பர் சாலை பெயர் பலகையில் கருப்பு மை பூசி அழிப்பு.. தமிழகத்தை பின்பற்றும் டெல்லி..!

அடுத்த கட்டுரையில்
Show comments