Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி : பதறவைக்கும் சம்பவம்

ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி : பதறவைக்கும் சம்பவம்
, வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (21:03 IST)
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, வட மாநில மூதாட்டி ஒருவர் ரயில் எஞ்சினுக்கு அடியில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரயில் வேகமாக சென்றுகொண்டிருந்தது.அப்போது, ஒரு மூதாட்டி தண்டவாளத்தின் மீது நடந்து வந்த மூதாட்டி அந்த ரயிலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தண்டவாளதிலேயே படுத்துக்கொண்டார். 
 
ஆனால் ரயில் 30 கி. மீ வேகத்தில் வந்ததால், ஓட்டுநர் ரயிலைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தார். அந்த மூதாட்டியை ரயில் நெருங்கிய போது, அவர் ரயில் எஞ்சினில் மாட்டிக் கொண்டார்.
 
பின்னர், அங்கு வந்த ரயில்வே போலீஸார் எஞ்சினுக்கு அடியில் டிரெச்சரை புகுத்தி மூதாட்டியை பத்திரமாக மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது ,அவர் ஹிந்தியில் பேசியுள்ளார். மேலும் மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவும் அவர் நடந்து கொண்டதால் அவரை மீட்ட ரயில்வே  போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் எல்லோரும் கார்ட்டூன் சேனல் பார்க்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ