Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்: வட மாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளித்த கவர்னர்..!

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்: வட மாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளித்த கவர்னர்..!
, ஞாயிறு, 5 மார்ச் 2023 (15:12 IST)
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள் என்றும் எனவே தமிழ்நாட்டு மக்களுக்கு பயந்து வடநாட்டு மக்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியே வேற வேண்டாம் என்று தமிழக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் வடநாட்டு தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற வதந்தி மிக வேகமாக பரவி வரும் நிலையில் இரு மாநில முதலமைச்சர்கள் மற்றும் காவல் துறையினர் இது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்
 
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி கிளப்பினால் காட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தொழிலாளர்கள் அச்சமடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என்றும் தமிழ்நாடு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நடப்பானவர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
மேலும் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவில் இருந்து திடீரென விலகிய நிர்மல்குமார்.. அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு..!