Publish Date: Mon, 10 Apr 2023 (17:03 IST)
Updated Date: Mon, 10 Apr 2023 (17:04 IST)
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் மசோதா தடை மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆறு மாதங்கள் கழித்து ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும் அந்த மசோதாவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்திருந்தார்
இந்த நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு கவர்னரின் அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவிற்கு தற்போது ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
மசோதாவில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என ஆளுநர் கூறியதை அடுத்து எந்தவித மாற்றமும் செய்யாமல் தமிழக சட்டமன்றத்தில் அந்த மசோதா மீண்டும் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது