அயோத்தி ராமர் கோயிலில் நடைபெறும் இரண்டாம் கட்ட கும்பாபிஷேக நிகழ்வுகள் இன்று காலை தொடங்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வுக்குப் பிறகு, கோயிலின் மேலடுக்கு பணிகள் தொடர்ந்தன. தற்போது, மூன்று நாள் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறவுள்ளன.
சராயு நதியில் இருந்து அழைத்து வரப்பட்ட புனித நீர் கலசங்கள் கோயிலில் நிறுவப்பட்டன. தங்க அலங்கார குவிமாடமும் கோபுரத்தில் உயர்த்தப்பட்டது. ஜூன் 5ஆம் தேதி முக்கியமான சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ள நிலையில், ராமர், சீதா, லட்சுமணர், ஹனுமான் ஆகியோரின் சிலைகள் தரிசனத்திற்குத் தயாராகின்றன.
இதுகுறித்து ராமர் கோவிலின் முக்கிய நிர்வாகி சம்பத் ராய் தெரிவித்ததாவது, இந்நிகழ்வுகளுக்காக ஏராளமான பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்ந்து பெய்யக்கூடிய கனமழை, பாதுகாப்பு சிக்கல்கள் ஆகியவற்றை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோயில் சுற்றுவட்டாரமும், நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருக்கிறது. அயோத்தி நகரம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்நிகழ்வுகள் பக்தர்களுக்காக நேரலை வழியாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.