Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

Siva

, புதன், 3 ஜூலை 2024 (08:30 IST)
சென்னை விமான நிலையத்தில் உள்ள பரிசுப் பொருள் கடை மூலம் நடந்த 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் சர்வதேச விமானங்கள் செல்லும் பகுதியில் பரிசுப் பொருள் கடை திறக்க பாஜக பிரமுகர் பிருத்வி உதவியதாக சபீர் அலி என்பவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சபீர் அலி வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள பாஜக பிரமுகர் பிருத்வி வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும்  ரூ.167 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் விமான நிலைய அதிகாரிகள், அரசியல் புள்ளிகளுக்கு தொடர்புள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான சென்னையைச் சேர்ந்த சபீர் அலிக்கு விமான நிலைய அதிகாரிகள் சிலரே உதவியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் பல பெரும்புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!