Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குறையாத தங்கத்தின் விலை: சவரன் ரூ.32,576-க்கு விற்பனை!!

குறையாத தங்கத்தின் விலை: சவரன் ரூ.32,576-க்கு விற்பனை!!
, சனி, 22 பிப்ரவரி 2020 (10:45 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.32,576க்கு விற்பனை ஆகிறது. 
 
உலகளாவிய அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகமானதால் தங்கத்தின் விலையும் கடந்த சில வாரங்களில் மிக வேகமாக உயர்ந்துள்ளது. விலை அதிகரித்த சூழலில் இந்த வார இறுதிக்குள் தங்கத்தின் விலை 32 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.  
 
நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.32,000 தாண்டிய தங்கத்தின் விலை இன்றும் குறையாமல் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.32,576க்கு விற்பனை ஆகிறது. அதாவது, தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.21 உயர்ந்து ரூ.4,072க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்டு மேல பதினாலு நம்பர் சொல்லு சார்! – பேங்க் மோசடி பார்ட்டி கைது!