Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது பாரில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட இளம் பெண்கள்.. போலீசாரை கண்டதும் அலறியடித்து ஓட்டம்..

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (10:27 IST)
சென்னை நந்தனம் பகுதியில் தனியார் மதுபாரில் நள்ளிரவில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மது போதையில்  ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த நிலையில் போலீசாரை கண்டதும் அலறி அடித்து ஓடியதாக வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

சென்னை நந்தனம் பகுதிகளில் உள்ள பிரபலமான தனியார் மது பாரில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் மது போதையில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுவதாக காவல்துறைக்கு புகார் வந்தது  

இந்த புகார் குறித்து விசாரணை செய்ய காவல்துறையினர் வந்ததை பார்த்ததும் ஆட்டம் பாட்டத்தில் இருந்த இளம் பெண்கள் இளைஞர்கள் பதறியபடி வெளியேறினர். இளம் பெண்கள் தங்கள் முகத்தை மறைத்து மது போதையில் ஓட்டம் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காவல்துறையினர் முழு விசாரணை செய்து வருவதாகவும் மது பாரில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனமா? ராகுல் காந்தி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments