Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூட்கேஸில் இருந்த பெண்ணின் சடலம்.. சென்னையில் அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
வியாழன், 19 செப்டம்பர் 2024 (11:10 IST)
மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த சென்னை துரைப்பாக்கம் பகுதியில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் சூட்கேசில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் மணலி பகுதியில் வசிக்கும் 31 வயது பெண் தீபா என தெரிய வந்துள்ளதை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில், சந்தேகத்துக்கிடமான சூட்கேசிலிருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சூட்கேஸில் ரத்தக்கறைகள் இருந்ததால், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அப்பகுதியில் யாரேனும் சந்தேகமாக சூட்கேசுடன் சென்றார்களா என்பதை ஆராய்ந்து வருகின்றனர். 
 
மேலும், கொலை எங்கு நிகழ்ந்தது? உடலை கொலை செய்த இடத்தில் இருந்து கொண்டு வந்து இங்கு போட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments