Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Chennai Rain

Siva

, வியாழன், 19 செப்டம்பர் 2024 (08:15 IST)
தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக பகலில் அதிக வெப்பநிலை இருப்பதால் பொதுமக்கள் அவதியில் இருக்கும் நிலையில், மாலை மற்றும் இரவில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்வது பொதுமக்களுக்கு நிம்மதியை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், காற்றின் வேக திசை மாறுபாடு காரணமாக இன்று காலை 10 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும், இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

சென்னையில் இன்று மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் இந்தியா-வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்குமா என்ற அச்சமும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிளாஸ்டிக், அலுமினியம் ஃபாயில் காகிதங்களில் உணவு பொட்டலம்.. மலட்டுத்தன்மை ஏறப்டும் என எச்சரிக்கை..!