Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சதுர்த்தி சிலைகள்; ட்ரெண்டாகும் ஆபரேஷன் சிந்தூர் விநாயகர்!

Prasanth K
புதன், 27 ஆகஸ்ட் 2025 (10:06 IST)

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் ஆபரேஷன் சிந்தூர் விநாயகர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், மக்கள் பலரும் விநாயகர் சிலைகளை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு தெருவிலும் தெருவாசிகள் சேர்ந்து பிரம்மாண்டமான பெரிய விநாயகர் சிலைகளை வாங்கி தெரு முக்கில் வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

 

இதற்காகவே விதவிதமாக பல விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வருகின்றன. அந்தந்த கால ட்ரெண்டிங்கிற்கு ஏற்ப கேஜிஎஃப் விநாயகர், புல்லட் விநாயகர் என பல விநாயகர் சிலைகள் வைக்கப்படுகின்றன. அவ்வாறாக இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

 

இந்த ஆண்டு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலும், அதற்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் அதிரடி தாக்குதலும் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த ஆபரேஷன் சிந்தூரை நினைவுக்கூரும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ விநாயகர் சிலையை அமைத்துள்ளனர் ஏரல் மக்கள். நான்கு கைகளை கொண்ட விநாயகர் ராணுவ உடையில் இரு கைகளில் துப்பாக்கியையும் மீத இரு கைகளில் தேசியக் கொடியையும் ஏந்தி நிற்கும் காட்சி வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று விநாயகர் சதூர்த்தி.. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து..!

இந்தியாவை கண்டித்துவிட்டு ரஷ்யாவுடன் கொல்லைப்புற டீல்! - அமெரிக்க குட்டு அம்பலம்!

இந்திய பெருங்கடலில் இறங்கிய ஸ்டார்ஷிப்! 10வது சோதனையில் வெற்றி!

மதுரை மாநாட்டில் தொண்டர் மீது தாக்குதல்: விஜய் மீது வழக்குப்பதிவு..!

இன்று காலையிலேயே 8 மாவட்டங்களில் மழை.. விநாயகர் சதூர்த்தி கொண்டாட திட்டமிடுங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments