Publish Date: Sun, 12 Jul 2020 (17:32 IST)
Updated Date: Sun, 12 Jul 2020 (17:39 IST)
கொரோனா வைரஸ் தாக்கம் சென்னையில் குறைந்து கொண்டே வந்தாலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அதிகரித்துக் கொண்டே வருவது பெரும் கவலையை அளிக்கிறது. சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு சென்றவர்களால் தான் கொரோனா வைரஸ் அனைத்து மாவட்டங்களிலும் பரம்பி இருப்பதாக கூறப்படுகிறது
குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருப்பதால் அம்மாவட்டத்தில் ஜூலை 15 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சற்று முன்னர் அறிவித்தது என்ற செய்தியைப் பார்த்தோம்
இந்த நிலையில் மதுரையை அடுத்த கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நாளை முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக விருத்தாசலம் நகராட்சி அறிவிப்பு செய்துள்ளது. இதனை அடுத்து ஜூலை 31-ஆம் தேதி வரை பால் மருந்து பொருள்கள் உள்ளிட்ட கடைகள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் முழுமையான ஊரடங்கு விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது