Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன்: பரபரப்பில் எதிர்க்கட்சிகள்!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (09:29 IST)
நாளை முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன்
மத்திய அரசின் கொள்கை திட்டமான ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேசம், ஒரே நாடு ஒரே ரேஷன் ஆகியவைகளை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் அக்டோபர் 1 முதல் நாடு முழுவதும் ’ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் அமல்படுத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது 
 
இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் உள்பட ஒரு சில அரசியல் கட்சிகள் வழக்கம்போல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
இதன் மூலம் பிற மாநிலத்தில் உள்ளவர்களும் தமிழக ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்து அரிசி கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரேஷனில் பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை கருவி பொருத்தும் பணி இன்னும் முடிவடையவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் பயோமெட்ரிக் கருவி பொருத்தும் பணியில் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாளை முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தமிழக எதிர்க்கட்சிகள் பரபரப்பில் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments