Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 1 முதல் என்னென்ன தளர்வுகள்... தடைகள்... முழு விவரம்!!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (09:24 IST)
மருத்துவர்களுடனான ஆலோசனைக்கு பிறகு மீண்டும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு. 
 
கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனாவால் துவங்கிய ஊரடங்கு மாத மாதம் சில தளர்வ்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இன்றுடன் முடியும் ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முறை வழங்கப்பட்டுள்ள தளர்வுகள், தொடரும் தடைகள் குறித்த விஅரம் இதோ... 
 
1. உணவகங்களில் இரவு 10 மணி வரை பார்சல் மூலம் உணவு வழங்குவதற்கு அனுமதி.
2. 8 மணி வரை இயங்கி வந்த கடைகள் கூடுதலாக 9 மணி வரை இயங்க அனுமதி. 
3. திரைப்பட படப்பிடிப்புகளில் ஒரே சமயத்தில் 100 நபர்கள் வரை கலந்துகொள்ள அனுமதி.
4. தினந்தோறும் வெளிமாநிலங்களிலிருந்து 100 விமானங்கள் வரை வர அனுமதி.
5. அரசு, அரசு துறை சார்ந்த பயிற்சி மையங்கள் செயல்படுவதற்கு அனுமதி. 
6. 144-ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடரும்.
7. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்களுமின்ற ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.
8. பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படுவதற்கான தடை தொடரும்.
9. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், பூங்காங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு தடை. 
10. புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை தொடரும்
11. மதம் சார்ந்த, சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, ஊர்வலங்கள் நடத்த தடை.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments